2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. யாருடைய பணமாவது உங்கள் கையில் இருக்கும். நீங்கள் நினைப்பது நடக்கும். உங்களது எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களது எதிர்கால கனவுகள் குறித்து இப்போதே யோசியுங்கள். நீங்கள் நம்பி இருப்பவர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள். வீடு மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் உள்ளன. சொத்துக்களை விற்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். எல்லாவிதமான உறவுகளாலும் மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்வீர்கள். குறிப்பாக கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கும். வருமானங்களும் நன்றாக இருக்கிறது. அதே போன்று அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் ஏற்றமான காலம். வேலையை பொறுத்தவரை, எதிர்பார்த்த பிரமோஷன் கிடைக்கும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கையும் சிறப்பாக உள்ளது. உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே உள்ள காதல் திருமணத்தில் முடியும். விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது.

Updated On 16 April 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story