✕
2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கௌரவம், அந்தஸ்து கூடும். சமூகத்தில் உங்களுக்கான பெயர், புகழ் அதிகரிக்கும். தொழிலதிபராக வருவதற்கான சந்தர்ப்பங்கள் இறையருளால் கிடைக்கும். பொருளாதார நிலைகளும் பரவாயில்லை. முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் நினைப்பது நடக்கும். உங்களது எண்ணங்கள், சிந்தனைகளை செயலாக்கம் செய்யுங்கள். அதற்கான வெற்றி உண்டு. வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சூழ்நிலைகள் உருவாகும். சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி பரவாயில்லை. வேலையில் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத பயணம், பயணத்தால் நன்மை ஏற்படும். விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபட்டால் இன்னும் ஏற்றம் உண்டாகும்.

ராணி
Next Story