2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். செலவினங்கள் ஏற்படும். முதலீடுகள் செய்யலாம். புதிய முயற்சிகள் வேண்டாம். நெருங்கிய உறவுகள் உங்களை விட்டு பிரிந்து போவார்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கேற்ற லாபம் கிடைக்கும். குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும் அதே நேரம் கவனமாக இருக்க வேண்டும். சொந்த தொழில் பரவாயில்லை. இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். சிவ தரிசனம் மற்றும் பெருமாள் வாழிபாடு ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.

Updated On 30 Jan 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story