2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் நீங்கள் நினைப்பதை செயலாக்கம் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். டிராவல் செய்ய நினைத்தால் செய்யுங்கள். முற்றிலும் புதிய சூழ்நிலைகள், புதிய இடத்தில் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாரம் சம்பாதித்துக்கொண்டே கற்றுக்கொள்வீர்கள் அல்லது கற்றுக்கொண்டே சம்பாதிப்பீர்கள். தேடுதல் என்பது உங்களுக்கு இருக்கும். எவ்வளவு தூரம் தேடுகிறீர்களோ, அவ்வளவுக்கு வெற்றி பெறுவீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கையில் பணம், தனம் இருந்துகொண்டே இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். கல்வி நன்றாக உள்ளது. சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். உங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். எந்த வேலையில் இருந்தாலும் உங்களது பணியை திருப்தியோடு செய்யுங்கள். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங் போன்ற எதிலும் முதலீடு செய்யாதீர்கள். கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம், முன்னேற்றம் உண்டு. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. வாரம் முழுவதும் சிவன் மற்றும் பிரம்மா வழிபாடு பிரதானமாக செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

Updated On 23 April 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story