2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஒரு பக்கம் தெய்வ அனுகூலம் இருந்தாலும், மறுபக்கம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். அந்த பயணங்களால் தேவையற்ற செலவுகள், விரயங்கள் மற்றும் சில நஷ்டங்கள் கூட உண்டாகலாம். ஆகையால், பயணங்கள் மேற்கொள்வது குறித்து நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது. இதுவரை உங்கள் குடும்பத்தில் தடைபட்டுவந்த சுப காரியங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி உண்டு. உங்களுக்கு திருமணத்திற்கான வாய்ப்புகள் மற்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வெளிநாட்டு தொடர்புகள் மிகவும் சாதகமாக இருக்கும். நல்ல ஒரு நட்பு வட்டாரம் உருவாகும். பெரிய மனிதர்கள், பெரியோர்கள் மற்றும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அவசியம். எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்யுங்கள். உறவுகள் விஷயத்தில் தேவையில்லாத மன வருத்தங்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். யாரையும் அதிகமாக நம்பி இருக்காதீர்கள். நீங்கள் கலைத்துறையில் இருந்தால், புகழ் மற்றும் பாராட்டுக்கள் உங்களைத் தேடி வரும். இந்த வாரம் நீங்கள் துர்க்கை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மேலும், சிவ தரிசனம் செய்வதும் நன்மைகளைத் தரும்.

Updated On 20 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story