✕
2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் சுமாராக இருக்கும். திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொருளாதார பிரச்சினைகள் இல்லை. புதிய முயற்சிகள் பெரிய அளவில் வேண்டாம். நிதானமாக செயல்படுவது நல்லது. யாரையும் நம்ப வேண்டாம். எல்லா உறவுகளின் தொடர்புகளையும் விரிவுபடுத்துங்கள். நெருங்கிய உறவினர்கள் பிரிவார்கள். சொத்துக்கள் விற்பனை ஆகாவிட்டால் கவலை வேண்டாம். வேலையில் கவனம் அவசியம். புதிய அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் நன்மை உண்டாகும். சிவன் மற்றும் பெருமாள் வழிபாடு நற்பலன்களை தரும்.

ராணி
Next Story