2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். ஆசைகள் பூர்த்தியாகும். அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் இந்த வாரம் நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல்கள் உருவாகும். பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம் இருக்கிறது. நீங்கள் நினைப்பது நடக்கும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பிரச்சினைகள் வரும்போதெல்லாம் உங்களுக்கு அவர்கள் துணை நிற்பார்கள். உங்களது மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, வருமானங்கள் இருக்கிறது. அரசியல் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். வேலையை பொறுத்தவரை பணி உயர்வு, சம்பளவு உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. மணவாழ்க்கை பரவாயில்லை. சொந்த தொழில் நன்றாக இருக்கும். கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வராத பணங்கள் வந்து சேர வாய்ப்புள்ளது. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இந்த வாரம் விநாயகர் மற்றும் கருப்பண்ண சாமியை வழிபாடு செய்வது நற்பலன்களை கிடைக்கச்செய்யும்

Updated On 29 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story