2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொழுதுபோக்கு நிகழ்வுகள் நிறைய இருக்கும். அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். குழந்தைகளை பிரிந்து இருப்பீர்கள். விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, லாட்டரி டிக்கெட் போன்ற எதிலும் முதலீடுகள் செய்ய வேண்டாம். உங்களது எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். வருமானம், லாபம் இருக்காது என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் சுமாராக உள்ளது. அதனால் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. வங்கி கடனுக்கு விண்ணப்பித்து வரவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பெரிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். இந்த வாரம் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். ஒரு செயலை செய்வதற்கு முன்பு நன்கு யோசித்து செய்யுங்கள். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வந்து சேரும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்பாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னரும், நீங்களும் திருப்தி இல்லாத மனநிலையில் இருப்பீர்கள். திருமண வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும். பெரிய அளவில் நோய் இருந்தால் நோயின்தன்மை குறையும். பெரிய அளவில் கடன் இருந்தால் கடன் குறையும். சிவன் மற்றும் மகா விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மை உண்டாகும்.