2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எண்ணிய எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் வெற்றியடையும். நினைப்பவை அனைத்தும் நடக்கும். எதிர்பாராத பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். உறவுகளால் நற்பலன்கள் கிடைக்கும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் அமையும். தொழில் நன்றாக உள்ளது. கல்வி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். விவசாய துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல் மற்றும் லாபம் இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த லாபம் கிடைக்கும். முதலீடுகள் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். விட்டதை பிடிக்க ஆசை படாதீர்கள். காதல் தோல்வி ஏற்படும். வேலையில் முன்னேற்றம் உண்டு. வங்கி கடன் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சொந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மகாலட்சுமி மற்றும் சிவன் தரிசனம் நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கும்.

Updated On 30 Jan 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story