2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் இருப்பதால் நினைப்பதை செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பயணம், அதனால் மகிழ்ச்சி சந்தோஷம் உண்டாகும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் கடின உழைப்பிற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் திருப்தி இல்லாத மனநிலையில்தான் இருப்பீர்கள். வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உங்களது தொழில் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது. பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்பாவின் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். உங்களது கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். மூத்த சகோதர, சகோதரிகள் மற்றும் தோழிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் முதலீடுகள் செய்ய வேண்டாம். சிவன் மற்றும் மகாவிஷ்ணு வழிபாடு செய்தால் ஏற்றம் உண்டாகும்.
