2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக நகை, இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் உண்டு. புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை, லாபம் இருக்கிறது. சிவில், மோட்டார், மெக்கானிக்கல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்லதொரு முன்னேற்றம் இருக்கிறது. கையில் பணம், தனம், பேங்க் பேலன்ஸ் இருக்கும். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை பிரச்சினைகள் ஏதும் இல்லை. சொந்த தொழில் சுமாராக இருக்கும். மணவாழ்க்கை நன்றாக உள்ளது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். எது எப்படி இருந்தாலும் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடிக்கொண்டே போகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கடன் இருந்தால் அது இன்னும் கூடிக்கொண்டே செல்ல வாய்ப்புள்ளது. சிவன் மற்றும் பிரம்மாவை வழிபடுங்கள் சிறப்பை தரும்.

Updated On 16 April 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story