2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத பயணத்தால் நன்மை ஏற்படும். விருந்தினர்கள் உங்களின் வீட்டிற்கு வருவார்கள். பொருளாதார பிரச்சினைகள் ஏதும் இல்லை. கையில் பணம், தனம் இருக்கிறது. நீண்ட நாட்களாக நகை, புதிய ஆடைகள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. லோன் வாங்கி இடம், வீடு, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. பெரிய முயற்சிகள் இல்லாமலேயே நீங்கள் நினைத்த காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். தொழிலில் தகராறு, நிச்சயமற்ற தன்மை இருக்கும். உங்களது உடல் ஆரோக்கியத்திலும், அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். இந்த வரம் முழுவதும் உங்களது இஷ்ட தெய்வம் மற்றும் முருகனை வழிபட்டால் நல்லதொரு முன்னேற்றம் அமையும்.

Updated On 25 April 2024 5:44 AM GMT
ராணி

ராணி

Next Story