2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் அந்தஸ்தோ புகழோ ஏதோ ஒரு வகையில் அதிகரிக்கும். இரண்டாம் இடத்தில் சனி, குரு பார்ப்பதால் எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு உண்டு. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம், நிலுவையில் உள்ள பணம், பென்ஷன், பி.எஃப்., அரியர்ஸ், இன்சூரன்ஸ், டிவிடெண்ட் அல்லது வெளியில் கொடுத்த வட்டி பணம் ஏதோ ஒரு ரூபத்தில் சிறிது சிறிதாக வந்து சேரும் வாய்ப்புகள் அதிகம். இந்த வாரம் புதிய காதல் உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு காதல் வெற்றி பெறும். பிரிந்த காதல் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு. ஜாதி, மதம், இனம், மொழி கடந்த தொடர்புகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளால் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது, தேவையற்ற செலவுகள் அல்லது அவர்களால் பிரச்சனைகள், மனவருத்தங்கள் ஏற்படலாம். குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற விற்பனையும் லாபமும் உண்டு. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. தந்தையின் அன்பு, ஆதரவு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக இருக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் தாராளமாக முயற்சி செய்யலாம். வேலையைப் பொறுத்தவரை, சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் நம்பியவர்கள் இந்த வாரம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். சிவன் கோயிலில் உள்ள பிரம்மாவையும் நந்தியையும் வழிபடுவது நல்லது.

Updated On 15 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story