2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முதலீடுகள் செய்வது நல்லது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத பயணத்தால் செலவினங்கள் இந்த வாரம் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்காக செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் கவனம் செலுத்துங்கள். எந்த துறை பணிகளில் இருந்தாலும் பொறுமை அவசியம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. விவசாயத்திலும் நல்ல மகசூல், லாபம் இருக்கிறது. சொந்த தொழில் பரவாயில்லை. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். ஓரளவுக்கு ரிட்டன்ஸ் கிடைக்கும். பெரிதாக உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் நோயால் அவதிப்படுபவர்கள் அதில் இருந்து விடுபடுவீர்கள். அதிகமாக கடன் இருப்பதாக நினைப்பவர்களுக்கு, கடன் குறைய வாய்ப்புள்ளது. இந்த வாரம் உங்களது இஷ்ட தெய்வத்தை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக விநாயகரையும் வழிபாடு செய்வது நல்லது.

Updated On 25 April 2024 5:44 AM GMT
ராணி

ராணி

Next Story