2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எண்ணிய எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நினைப்பது நடக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்கள் உங்களை விட்டு பிரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அலுவலக மாற்றம் செய்யலாம். சம்பள உயர்வு, பணி உயர்விற்கு வாய்ப்புள்ளது. வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். வங்கி கடன் கிடைக்கும். தொழில் பரவாயில்லை. திருமண வாழ்க்கையும் சுமாராக இருக்கும். கௌரவம் காப்பாற்றப்படும். மகிழ்ச்சி கூடும். எதிர்பாராத நட்பு வட்டம் உருவாகும். சிவன் தலத்தில் இருக்கக்கூடிய பைரவர் மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது நற்பலன்களை தரும்.
