சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை இன்று உள்ள பிரச்சனை எதுவென்றால் முடிகொட்டுவது. சிலர் பேசும்போது கேட்டிருப்போம், எனக்கு முடி கொட்டிக்கிட்டே இருக்கு, என்ன செய்றதுன்னே தெரியல. என்னென்னமோ ட்ரை பண்ணிட்டேன். ஒன்னுமே வேலைக்கு ஆகல என்பார்கள். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வியர்வை, மாசு, மன அழுத்தம், மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், மோசமான ஊட்டச்சத்து, சில மருந்துகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் முடி கொட்ட காரணங்களாக இருக்கின்றன. இதில் மருத்துவ காரணங்களால் முடி கொட்டுகிறது என்றால், மருத்துவரின் ஆலோசனையை பெறுதல் அவசியம். அதைத்தவிர்த்து, முறையான பராமரிப்பு இல்லாமல் முடி கொட்டுகிறது என்றால், அதனை சரிசெய்ய முக்கிய முடி பராமரிப்பு டிப்ஸ்களை தருகிறார் அழகு கலை நிபுணர் வித்யா மைதிலி.
கற்றாழை, கருஞ்சிரகம், சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்து ஷாம்பூவுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்
தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்
தலைமுடிக்கு என்ன ஷாம்பூ வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதற்கு முன்பு கற்றாழை, கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றை அதிகமான அளவே எடுத்துக்கொள்ளுங்கள். தவறு இல்லை. எதுவும் ஆகாது. இது மூன்றையும் இரவே தண்ணீரில் ஊறவைத்துவிடுங்கள். ஊறவைத்ததை காலையில் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு கெட்டியாக வரும்போது அடுப்பை ஆஃப் செய்து, வடிகட்டிக்கொள்ளவும். அந்த தண்ணீர் நன்கு ஆறியதும், ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள்.
எப்பொழுதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்களோ, அப்போது நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை ஒரு கின்னத்தில் போட்டுக்கொண்டு, அதனுடன், கற்றாழை, கருஞ்சீரகம் மற்றும் வெந்தய ஐஸ் க்யூப் கட்டிகள் இரண்டை போட்டு நன்கு மிக்ஸ் செய்து தலைக்கு தேய்த்து குளித்தால் நல்ல குளிர்ச்சி கிடைக்கும். முடி நன்கு ஃப்ரெஷ்ஷாகிவிடும். இப்படி குளிப்பதால் ஷாம்பூ என்ற கெமிக்கல் பிரச்சனை இருக்காது. இயற்கை பொருட்களால் தலைக்கு குளித்ததுபோல் ஆகிவிடும். முடிக்கும் எந்த டேமேஜூம் ஆகாது.
மிருதுவான சீப்பில்தான் தலைசீவ வேண்டும் - தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பது நல்லது
சிலருக்கு தலையில் நன்கு வியர்க்கும். அதுபோன்று வியர்க்கும் நேரங்களில், தலைமுடியை நன்கு விரித்து ஃபேனுக்கு கீழே நின்று உலர்த்தலாம். அல்லது துணியால் தலையில் வியர்வையை துடைக்கலாம். வியர்வையுடன் தலையை சீவக்கூடாது. வியர்வையை துடைத்த பின்பே தலையை சீவவேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரலாம். இதனால் அரிப்பு ஏற்படும். கண்டிப்பாக முடி கொட்டும். மேலும் தலைக்கு குளிப்பதை தினசரி வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. தினசரி தலைக்கு குளிப்பதால், தலைமுடி சுத்தமாக இருக்கும். வேறு பிரச்சனைகள் எதுவும் வராது. நாம் என்னதான் முகத்திற்கு மேக்கப் போட்டாலும் ஹேர்ஸ்டைல் என்பதும் முக்கியம். முடி நன்றாக இருந்தால்தானே ஹேர்ஸ்டைல் செய்ய முடியும். எனவே தினந்தோறும் நேரம் ஒதுக்கி தலைமுடியை பராமரிக்க வேண்டும்.
தலைக்கு சாஃப்டான சீப்பைதான் பயன்படுத்த வேண்டும். மேலும் ஒரே மாதிரி வகுடு எடுத்து தலையை சீவாதீர்கள். அப்படி செய்தால் வகுடு எடுக்கும் இடத்தில் இடைவெளி அதிகமாகி, அந்த குறிப்பிட்ட இடத்தில்மட்டும் முடி மிகவும் குறைவாக இருப்பதுபோல் தெரியும். அப்படி ஒருவேளை உங்களுக்கு இருக்கிறதென்றால் விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை முடி குறைவாக உள்ள இடத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தடவலாம். அவ்வாறு செய்தால் தலைமுடியின் தரம் அதிகரிக்கும். ஸ்கேல்ப் நன்றாக இருக்கம். உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன் ஃப்ங்கல் பிரச்சனைகளும் வராது.
தலைமுடிக்கு எதை அப்ளை செய்தாலும் 10 முதல் 20 நிமிடங்களுக்குதான் ஊறவைக்க வேண்டும்
ஹேர் பேக் போடுவது எப்படி?
சிலர் தலைமுடிக்கு மெஹந்தி பேக் போடுவார்கள். அவ்வாறு போடுபவர்களின் முடி பார்ப்பதற்கு மிகவும் ரஃப்பாக ப்ரஷ் மாதிரி இருக்கும். காரணம் பார்த்தோமானால், தலைக்கு மெஹந்தி அப்ளை செய்யும்போது ்ஸகேல்பில் மட்டும்தான் செய்ய வேண்டும். ஆனால் நிறையபேர் முடி முழுவதற்கும் மெஹந்தி அப்ளை செய்துவிடுவார்கள். அப்படி செய்யவேக் கூடாது. முடி முழுவதும் மெஹந்தியை அப்ளை செய்தால், அது முடிக்கு உண்டான இயற்கை எண்ணெய் பசையை முழுவதும் உறிஞ்சிவிடும். இதனால் முடி தேங்காய்நார் போன்று ஆகிவிடும். மெஹந்தியை பொருத்தவரை அது ஸ்கேல்புக்கு நல்லது. எனவே ஸ்கேல்பில் மட்டும் மெஹந்தியை அப்ளை செய்ய வேண்டும்.
மெஹந்தி, ஹேர் டை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோர் கவனத்திற்கு
எந்த ஒன்றை தலைக்கு அப்ளை செய்தாலும் அதிகபட்சம் 10 முதல் 20 நிமிடங்களுக்கு ஊறவைத்தோ அல்லது காயவைத்தோ, தலைக்கு குளித்துவிட வேண்டும். சிலர் மெஹந்தி, ஹேர் டை உள்ளிட்டவற்றை தலைமுடிக்கு அப்ளை செய்துவிட்டு, அது நன்கு காயட்டும் என்று 2, 3 மணி நேரமெல்லாம் அப்படியே விட்டுவிடுவார்கள். இப்படி செய்யவேக் கூடாது. இவ்வாறு மணிக்கணக்கில் தலையில் ஊறவைத்தால், முகம் வீங்கிவிடும். லேசாகத்தான் வீங்கியதுபோல் இருக்கும். ஆனால் இதேபோன்று தொடர்ந்து செய்துவந்தால் முகத்தில் பிக்மன்டேஷன் வந்து, முக அழகு கெட்டுவிடும்.
