சித்தர்கள் என்பவர்கள் யார்?

இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. மிகக் கடினமான இந்த முறையை சித்தர்களைத் தவிர யாராலும் சுலபமாக பின்பற்ற முடியாது.

சித்த பெருமக்களின் கருணை

அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி? யார் உதவி செய்வார்கள்? என்று எண்ணி வருந்தும் பொழுது, இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்தர்கள் மட்டுமே!

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்று குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள்.

குரு பூஜை மற்றும் அன்னதான விழா அனைத்து சித்த பெருமக்களுக்காக செய்யப்படும் பூஜை, உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களான சித்த பெருமக்களின் நாளாக கருதி வருடம்தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று சிறப்பு பூஜையும், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் நடைபெறுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது. இந்த அன்னதானத்தின் சிறப்பு எத்தனையோ பக்தர்களுக்கு இது அருமருந்து, உடல் மற்றும் மன பிணியை நீக்கி அனைத்து ஆன்மாக்களுக்கும் பிரசாதமாக திகழ்கிறது. கர்மயோகி பகவான் ஶ்ரீ குரு தாத்தா சுவாமிகளின் - சித்த பெருமக்களுக்கான குரு பூஜை மற்றும் அன்னதான விழா நடைபெறும் இடம் :

எண்: 160, 3 ஆவது தெரு , B.V. காலனி, வியாசர்பாடி, சென்னை - 39.

மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் -

Phone: 80159 21657

WhatsApp : 93619 17913

Updated On 3 Feb 2024 7:07 AM GMT
ராணி

ராணி

Next Story