“அனுபவம் புதுமை” இந்த இரு வார்த்தையில் எனது புத்தாண்டு அனுபவத்தை விவரித்து விடலாம். அதுபோல் தான் எனது புத்தாண்டு அனுபவம், போன வருடம் வரை புத்தாண்டை என்குடும்பத்துடன் திருச்சியில் கொண்டாடினேன். அப்போதெல்லாம் புத்தாண்டு வரும் சில மணிநேரம் முன்பு தெருவில் என்னது அம்மாவும் அவர்களின் நண்பர்களும் தெருவெல்லாம் புது புது கோலங்கள் போட்டு புத்தாண்டை வரவேற்க்க தயார் அவர்கள். 12மணி ஆனதும் என் குடும்பத்துடன் கேக்கை வெட்டி புத்தாண்டை மகிழ்வாய் எனது குடும்பத்துடன் கொண்டாடினேன். அந்த நேரம் எனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தல் மலைக்கோட்டை வாணவெடிக்கையுடன் பார்க்க அவ்ளோ அழகாக இருக்கும் இப்படியே என் புத்தாண்டு கொண்டாட்டம் செல்ல. இந்த வருடம் முன்புபோல் இல்லாமல் சென்னையில் தோழர்களுடன், புதிய மனிதர்களுடன், கொண்டாட தயாரானேன். மத்தவர்கள் போல் இல்லாமல் இரவு 12மணிக்கு என் நண்பர்களுடன் கலகலப்பாக பேசிக்கொண்டு இந்த வருடம் என்னென்ன குறும்படம் எடுப்போம் என பேசி நடந்து சென்றோம். கையில் இருக்கும் காசை பகிர்ந்து புத்தாண்டு கேக்கை வாங்க சென்றோம் ஆனால் 100ருபாய் கம்மியாக இருந்தது இருந்தபோதிலும் கடைக்காரர் சிரிப்புடன் கேக்கை குடுத்தார் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி சென்றோம். அந்த கேக்கை தெருவோரத்தில் வெட்டி அனைவருக்கும் சந்தோசமாக பகிர்ந்தோம்! அப்போது வாணவெடிக்கையை பார்க்கும்பொது எப்போதும் பார்க்கும் மலைக்கோட்டை இல்லாமல் புதிய வானம்தான் தென்பட்டது. அனுபவம் புதுமை தான்னே!