மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் - ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
முதல் மனைவியுடன் Judicial separation-ல் இருப்பதாகக் கூறி என்னை திருமணம் செய்து கொண்டார் - ஜாய் கிரிசில்டா
2 ஆண்டுகளுக்கு முன், சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள திருவீதி அம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் - ஜாய்
நான் கர்ப்பம் அடைந்தபோது, குழந்தை வேண்டாம், கருக்கலைப்பு செய்துவிடு என என்னை அவர் வற்புறுத்தினார் - ஜாய் கிரிசில்டா
அவர்தான் என் கணவர் மற்றும் என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு தந்தை. ஆனால் அவரை 2 மாதமாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.
கடும் போராட்டத்திற்கு பிறகு 2 வாரத்துக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜை சந்தித்தேன். அப்போது ‘உன்னிடம் பேச விரும்பவில்லை’ என்று கூறி, என்னை தாக்கினார்.
மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழவே நான் விரும்புகிறேன். இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டுமா? இல்லையா? என போலீசார் முடிவெடுப்பார்கள் - ஜாய் கிரிசில்டா