310 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக லட்டு ஏற்கப்பட்டாலும், 82 ஆண்டுகளாகத்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 2, 1715ம் ஆண்டுமுதல் திருப்பதி ஏழுமலையானுக்கு லட்டு, நைவேத்தியமாக படைக்கப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு தரப்படவில்லை.
1803ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பூந்தியாக வழங்கப்பட்டு வந்தது. முக்கியஸ்தர்களுக்கு மட்டும் முழு லட்டு வழங்கப்பட்டது.
1940ம் ஆண்டு ஏழுமலையானுக்கு நடந்த நித்ய கல்யாண உற்சவத்தில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
லட்டுவின் ருசியில் மயங்கிய பக்தர்கள், லட்டுவையே எப்போதும் பிரசாதமாக வழங்க தேவஸ்தானத்திடம் கோரிக்கை வைத்தனர்.
1943ம் ஆண்டுமுதல் சனிக்கிழமைதோறும் சிறிய லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு தினமும் வழங்கும்முறை உருவானது. இன்றும் சிறிய லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
2008ம் ஆண்டு திருப்பதி லட்டு புவிசார் குறியீடு பெற்றது. இவ்வளவு சிறப்புவாய்ந்த திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில்தான் கலப்படம் நடைபெற்று, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.