சிலர் சுடும் பூரி நன்கு உப்பலாக வரும். பலருக்கு உப்பலாக வராது. அப்படியே உப்பலாக வந்தாலும், சில நொடிகளில் வடிந்துவிடும்.
பூரி நீண்ட நேரம் உப்பலாக இருக்க, மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி சோயா மாவு, அரைக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் போதும்.
பூரி மாவில் ஒரு ஸ்பூன் ரவை, சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பூரி நன்கு உப்பி வரும்.
கோதுமை மாவுடன் கார்ன்ஃப்ளார் & ஒரு ஸ்பூன் ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி உப்பலாக வருவதுடன் மிருதுவாகவும் இருக்கும்.
பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் பூரி லேசாக இருக்கும்.
கோதுமை அல்லது மைதா மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துச் சேர்த்தால் பூரி மிக சுவையாக இருக்கும்.
தண்ணீர் அதிகம் சேர்க்காமல் சற்று இறுக்கமாக மாவை பிசைந்தால் பூரி அதிகம் எண்ணெய் இழுக்காது.
பூரி மாவை நீண்ட நேரம் பிசையவோ, ஊற வைக்கவோ கூடாது.
Explore