புழுங்கல் அரிசி - 4 டம்ளர், உளுந்து - 1 டம்ளர், வெந்தயம் - 1/2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
உளுந்து மற்றும் அரிசியை குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வைக்கவும்.
உளுந்தை கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் நன்கு மைய அரைக்கவும்.
பின் கிரைண்டரில் அரிசியுடன் கல் உப்பு சேர்த்து ரவை பதத்தைவிட சற்று மைய அரைக்க வேண்டும்.
அரிசி அரைக்கும்போது அன்று வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி கிடைக்கும்.
அரைக்கப்பட்ட அரிசி, உளுந்தை ஒரு பாத்திரத்தில் வழித்தெடுத்து 2 மாவையும் கைகளால் நன்கு கலக்கவும்.
வேறு பாத்திரத்துக்கு மாவை மாற்றி இரவு புளிக்க விடவும். அந்த மாவை மீண்டும் கிளறக்கூடாது. கிளறினால் கல் இட்லிதான் வரும்.
மறுநாளும் மாவை அதிகம் கிளறாமல் அப்படியே எடுத்து, இட்லித் தட்டுகளில் ஊற்றவேண்டும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டை வைத்து வேகவைத்தால், மல்லிப்பூ சாஃப்ட் இட்லி ரெடி!
Explore