ருத்ராட்சம் என்பது ஆன்மிக ரீதியிலும், மத நம்பிக்கைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ருத்ராட்சம் அணிவது, மன அமைதி, நல்ல உடல்நலம் உள்ளிட்டவற்றை தருவதாக நம்பப்படுகிறது.
ருத்ராட்சம் அணிவதுபோன்று ருத்ராட்ச நீரை குடிக்கலாம் என்றும், அந்த நீரை குடிக்க பல நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
செம்பு பாத்திரத்தில் ருத்ராட்சத்தை போட்டு, அதில் நீரை ஊற்றி, இரவு ஊறவைத்து, காலையில் குடிக்கலாம் என சொல்லப்படுகிறது.
ருத்ராட்ச நீர் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறதாம்.
நீரிழிவு நோய், காய்ச்சல், சின்னம்மை, காசநோய், நாள்பட்ட இருமல், ஆஸ்துமா, சயாட்டிகா, இதய நோய்கள், ஞாபக மறதி, புற்றுநோய் போன்றவற்றுக்கும் ருத்ராட்சம் நன்மை அளிக்குமாம்!
ஆனால் ருத்ராட்ச நீர் பற்றி மருத்துவ ரீதியிலோ, அறிவியல் ரீதியிலோ அதிகாரப்பூர்வமான உறுதியான தகவல்கள் இல்லை.
ருத்ராட்ச நீரை குடிக்க விரும்பினால், மருத்துவரை அணுகி, நம் உடல்நிலைக்கு அது பாதுகாப்பானதா என்று தெரிந்துகொள்வது நல்லது.