கண்டதும் காதல் சாத்தியமே என்று 75% ரஷ்ய நாட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பார்த்த உடனே காதலை தெரிவித்துவிட்டதாக 57% ஆண்களும், 46% பெண்களும் கூறியுள்ளனர்.
ஆனால் கண்டதும் காதல் சாத்தியமே இல்லை என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
18 முதல் 50 வயது வரையிலான 80 நபர்களிடம், டான்மாய் சர்மா என்ற அந்த ஆராய்ச்சியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
மனிதர்களின் காம உணர்ச்சி, சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சி, ஏதாவது விபத்தின்போது ஏற்படும் ரியாக்‌ஷன் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வின் மூலம், முதல் பார்வையில் ஏற்படுவது காம இச்சை மட்டுமே என்று ஆய்வாளர் டான்மாய் சர்மா நிரூபித்துள்ளார்.
ஒருவரையொருவர் பார்த்த முதல் சில வினாடிகளில் சிறு சலனத்தையாவது ஏற்படுத்திய காதல்தான் பல நேரம் நிலைத்து நிற்பதாக மற்றொரு உளவியல் சொல்கிறது.
இன்னும் சிலரோ, கண்டதும் காதல் வந்தால் என்ன? காணாமல் வந்தால் என்ன? நிலைத்திருந்தால் போதும் என்கின்றனர்!
Explore