உருமாறியிருக்கும் கொரோனாவானது சாதாரண சளிக்காய்ச்சல் போன்றதுதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் 3 அல்லது 4 நாட்கள் இருந்துவிட்டு போய்விடுமாம்.
இதயநோய், கேன்சருக்கு சிகிச்சை பெறுவோர், உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமாம்.
கொரோனாவால் உயிரிழப்பு என்பது இப்போதைய உருமாற்றத்தில் பெரிதாக இல்லையாம். இணை நோய்களால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றனவாம்.
கொரோனா பாசிட்டிவ் வந்தால், கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்து மற்றவர்களை பாதுகாக்கலாம்.
இளையோர் & நடுத்தரவயதினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், 3 நாட்களுக்கு காய்ச்சல் மாத்திரை போட்டுக்கொண்டிருந்தாலே நமது உடலே சரியாகிவிடும்.
அப்படி இல்லாதபட்சத்தில் மருத்துவரை அணுகி கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
இருந்தாலும் இந்த உருமாற்றம் குறித்து பயப்படத் தேவையில்லை என்று சொல்கின்றனர் மருத்துவர்கள்.
Explore