இந்தியாவில் செம்மொழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்! ஜூன் 6, 2004ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது.
செம்மொழியாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய, அது மிக நீண்ட பழமையுடையதாக, அதாவது குறைந்தது 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்க வேண்டும்.
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்ட பிறகு, பிற மாநிலங்களும் தங்கள் மொழி குறித்து கோரிக்கை வைத்ததால், இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அடுத்த சில ஆண்டுகளில், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளும் இந்தியாவின் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டன.
உலகச் செம்மொழிகள் பட்டியலிலும் தமிழ் உள்ளது. லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, சீனம் போன்ற உலகச் செம்மொழிகள் பட்டியலில் தமிழ் உள்ளதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
தமிழ் மொழியின் தொன்மைக்கு மிகச் சிறப்பான விஷயமாக விளங்குவது, அது கொண்டிருக்கும் வேர்ச்சொற்கள்.
எந்தவொரு இந்திய மொழியாக இருந்தாலும் அதில் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க, அவர்கள் சமஸ்கிருதத்தை நோக்கியே செல்கிறார்களாம்.
ஆனால் தமிழுக்கு அந்த நிலை இல்லை. தமிழுக்கு தேவையான வேர்ச்சொற்கள் அதனிடமே கொட்டிக்கிடப்பதாக மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Explore