கோடை விடுமுறையில் குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல.
முதல் முக்கிய விஷயம் மொபைல் ஃபோன்களில் இருந்து குழந்தைகளை விலக்கிவைப்பது.
அதற்கு பதிலாக புராண கதைகளையும், நகைச்சுவை கதைகளையும் கூறி குழந்தைகளை ஆனந்தப்படுத்தலாம்.
புத்தகம் வாசிப்பது மனநலத்தை அதிகரிக்கும் என்பதால், கதை புத்தகங்களை படிக்கவைத்து வாசிப்பு திறனை மேம்படுத்தலாம்.
நர்சரிக்கு அழைத்துச்சென்று செடிகள் மற்றும் பூக்களை பற்றி கூறலாம். வீட்டில் சிறிய செடிகளை வளர்க்க பழக்கலாம்.
முடிந்தால், பாட்டு, நடனம், ஓவியம், சமையல் போன்ற கலைகளை கற்பிக்கலாம்.
குழந்தைகளை அப்பா, அம்மா இருவரும் ஒரே நேரத்தில் கண்டிக்கக்கூடாது.
ஒருவர் கண்டிக்கும்போது இன்னொருவர் குழந்தையை சற்று சமாதானம் செய்து தட்டிக்கொடுக்க வேண்டும்.
Explore