பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்... அந்தரங்க உறுப்பை வெட்டிய பெண்!

Update:2025-06-17 00:00 IST
Click the Play button to listen to article

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், ஒடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டாலும், மறுபுறம் காம வெறிப்பிடித்த மனித மிருகங்கள் பெண்களையும், குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் கேட்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. அந்த வகையில் பீகாரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கின் விசாரணையை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து தீவிரப்படுத்தியுள்ளது. பீகாரிலேயே மற்றொரு சம்பவமாக, அவுரங்காபாத் மாவட்டத்தில், தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரின் அந்தரங்க உறுப்பை பெண் ஒருவர் வெட்டியுள்ளார்.


அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாலிபர்

அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்தது என்ன?

அவுரங்காபாத் மாவட்டம் பரூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர், கடன் வாங்கியிருந்திருக்கிறார். இந்தக் கடனை வசூலிக்க, பெண்ணின் வீட்டுக்கு வாலிபர் ஒருவர் வந்திருக்கிறார். கடனை வசூலிக்க வந்த வாலிபர், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், அருகே இருந்த அரிவாளை எடுத்து வாலிபரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். இதனால் வலியில் துடித்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவர் எழுப்பிய கூச்சலைக் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர், வாலிபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடனை வசூல் செய்யவந்த வாலிபர், வந்த இடத்தில் பெண்ணிடம், கடனை கொடு, இல்லையென்றால் என்னுடன் உடலுறவு வை என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து எந்த புகாரும் போலீசாருக்கு வராத நிலையில், தாமாக முன்வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்தியதால், அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியதாக பெண் கூறியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாலிபரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


உறவினர் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி மரணம்

பீகாரின் முசாஃபர்பூரில் மே 26 அன்று இச்சம்பவம் நடந்துள்ளது. தன்னுடைய வீட்டுக்கு வெளியே காலை 10 மணியளவில் சிறுமி விளையாடியுள்ளார். அப்போது சிறுமியின் வீட்டுக்கு அருகே வசித்துவந்த ரோஹித் என்பவர் அங்கு வந்துள்ளார். சிறுமியிடம் சென்ற அவர், சிறுமியை அவரது அத்தை வீட்டுக்கு கூட்டிச் செல்வதாகக் கூறி சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், ரோஹித், சிறுமியை அருகே உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியை கொல்லும் நோக்கில் பலமாக தாக்கியுள்ளார்.

சிறுமி நீண்ட நேரமாக வீட்டுக்கு வராத நிலையில், உறவினர்கள் சிறுமியை தேடியுள்ளனர். சந்தேசம்வந்து ரோஹித்திடம் அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் எதையும் கூறவில்லை. இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் வலுக்கட்டாயமாக, ரோஹித் காவல்நியைம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் ரோஹித் எதையும் கூறவில்லை. அதன்பின், சிறுமி ஒருவர் காயங்களுடன் சாலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பார்த்தபோது சிறுமி, உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் கிடந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி

உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின்னர் மேல் சிகிச்சைக்காக முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கழுத்து மற்றும் மார்பில் பலத்த காயமடைந்திருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி ஜூன் முதல் வாரத்தில் உயிரிழந்தார். சிறுமிக்கு மார்பில் லேசான காயங்களே இருந்ததாகவும், ஆனால் கழுத்தில் மூச்சுக்குழாய் வரை காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் இருந்ததாகவும், ஆனால் அதற்குண்டான வசதி ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இல்லாததால், பாட்னா மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும் கூறியுள்ளனர். சிறுமியை காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாக பாட்னா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

கதறும் உறவினர்கள்

அலட்சியத்தால் எங்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக சிறுமியின் உறுவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்றாம் வகுப்பு படித்துவந்த சிறுமியின் தந்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்றும், தன்னுடைய மூன்று குழந்தைகளை வளர்ப்பதற்காக அவர்களின் தாயார் கூலி வேலை செய்துவருவதாகவும், சிறுமியின் மாமா தெரிவித்தார். பலத்த காயமடைந்த எங்கள் குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும், நாங்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அலைக்கழிக்கப்பட்டோம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் சிறுமியை முறையாக கவனித்தனர். ஆனால் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பாடுகள் சிறப்பாக இல்லை. இரவு முழுவதும் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் மருத்துவரை பார்க்க சென்றபோதெல்லாம், மருத்துவமனை பாதுகாவலர்கள் எங்களை துரத்தினார். காலையில் நாங்கள் சிறுமியை பார்த்தபோது, அவளது தொண்டை மற்றும் வாயிலிருந்து ரத்தம் வழிந்து, அவள் இறந்துவிட்டாள்" என்று சிறுமியின் மாமா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

காவல்துறை கூறுவது என்ன?

இந்த சம்பவத்தில் குற்றம்சட்டப்பட்டுள்ள ரோஹித் குமார் சாஹ்னி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை கூற்றுப்படி, சிறுமியின் அத்தை வீட்டினருக்கு ரோஹித் நன்கு தெரிந்த நபர் என்றும், அதனை பயன்படுத்தியே அவர் சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.


சிறுமிக்கு நீதி வேண்டி பல்வேறு தரப்பினரும் போராட்டம்

இச்சம்பவம் தொடர்பாக பத்து நாட்களில் குற்றப்பத்திரிகை தயாரிக்கவும் விரைவான விசாரணை நடத்தவும் காவல்துறை முயற்சித்து வருவதாக முசாஃபர்பூரின் ஊரக காவல் கண்காணிப்பாளரான வித்யாசாகர் கூறியுள்ளார். சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரோஹித், சிறுமிக்கு சாப்பிட சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து அழைத்துச்சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரோஹித்தின் குடும்பம் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், ரோஹித்தின் மனைவி ஏற்கனவே அவரை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிறுமியின் ஆடை உட்பட பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அறிவியல்பூர்வ ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும், குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப்படுவான் என்றும் காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையம்

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரண்ம் அடைந்த இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பீகார் மாநில தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பங்கு குறித்து விசாரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்