ஏழரை சனி ஏழரை நிமிடத்தில் விலகிவிடும்! சனி ஜெயந்தியன்று இதை மட்டும் செய்யுங்கள்!
சனி பகவானின் பிறந்த நாள், சனி ஜெயந்தியாக வணங்கப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் சனி பகவானை வணங்கி ஆசீர்வாதம் பெறுவது சிறப்பு. குறிப்பாக ஏழரை சனி மற்றும் சனி திசை நடப்பவர்கள், சனி ஜெயந்தி அன்று சனிபகவானை வணங்கினால் கஷ்டங்கள் தீரும். ஏழரை சனியே நடந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏதும் அண்டாதாம். அந்த வகையில் இந்த வருட சனி ஜெயந்தி மே 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சனி ஜெயந்தி அன்று என்ன செய்ய வேண்டும்? சனியின் அருளை பெறுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பக்தர்களுக்கு எளிய பரிகாரங்களுடன் விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்.
அண்மையில் சனிப்பெயர்ச்சி நடந்துள்ள நிலையில் மீனம் உள்ளிட்ட ராசிகள் சிறிது அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் பரிகாரம் சொல்லுங்களேன்...
மீன ராசி என்றால் ராசிக்கட்டத்தில் 12-ம் இடம். 12-ம் இடம் கால் பகுதியை குறிக்கக்கூடியது. உடலை தாங்குவது கால்தான், அந்த பாதம்தான். சில நேரங்களில், நாம் சொல்வோம் அல்லவா, செருப்பு மாதிரி தேயிறான்யா, கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா என்றெல்லாம்... அவர்களை எல்லாம் பார்த்தீர்கள் என்றால், நிச்சயம் மீன ராசியாகத்தான் இருப்பார்கள். திறமையான ஒரு ஆட்சி நிர்வாகம் மீன ராசியினரிடம் உண்டு. அதிலும் ரேவதி நட்சத்திரம் என்பது சனியின் நட்சத்திரம். எனவே சனியின் கோச்சாரத்தின்போது ரேவதி நட்சத்திரக்காரர்கள் பெரிதாக உயர்ந்துவிடுவார்கள்.
சனியின் கோச்சாரத்தின்போது மீன ராசிக்கு நல்ல பலன் கிடைக்கும்
எனினும், சனீஸ்வரர் என்றால் வலி வேதனை என்று சொல்கின்றோம். அதேபோன்று உழைக்கக்கூடியவர்கள், கருணை உள்ளவர்கள், கருப்பு நிறத்தவர்கள், உறவினிலே பாட்டி தாத்தா போன்றவர்கள் எல்லாம் சனி பகவானின் குறியீடுகள். மேலும், உடல் பருமன், காற்றின் தத்துவம், தாமதம், குளிர்ந்த நிலை ஆகியவையும் சனீஸ்வரரை குறிக்கும். ஆனால் சனி, வாதத்தன்மை படைத்தவர். வாழ்க்கையில் 2 முக்கிய கிரகங்கள், குரு மற்றும் சனி. குரு ஒரு கட்டத்தைக்கடக்க ஒரு வருடத்தை எடுத்துக்கொள்வார். சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுகளை எடுத்துக்கொள்வார். அவருக்கு 3 பார்வைகள் உண்டு. மேலும் அவர், நம் வாழ்க்கையில் நம்முடனே தொடரும் நிழல் போன்றவர். எனவே கர்மா என்ற நிழல் இருக்கும்வரைதான் நாம் இருப்போம். சனீஸ்வரரை பற்றிய இந்த தகவல்களை எல்லாம் நாம் ஏன் கேட்க வேண்டும் என்று யாரேனும் நினைக்கிறீர்களா? ஏன் இதனை சொல்கிறேன் தெரியுமா? சனி பகவான் பற்றிய புராணத்தைக் கேட்டாலோ, அவர் எப்படி செயல்படுவார் என்பதை கேட்டாலோ... அந்த ஜாதகருக்கு சனீஸ்வரரின் பாதிப்பு கட்டாயம் குறையும்.
சிலர் சனீஸ்வரரைக் கண்டால் பயப்படுவோம். ஆனால், நம் செயலுக்கு ஏற்ப அவர் ஒருவர் மட்டுமே நல்ல பலன்களை தருவார். நீங்கள் நன்கு கவனித்து பாருங்கள், அரசியலில் யாருக்கெல்லாம், ஏழரை சனி நடக்கிறதோ, ஜென்ம சனி நடக்கிறதோ, அவர்தான் வெற்றி பெறுவார். எனவே, சனி பகவான் உள்ளே வருவதால், மீன ராசியினர் அச்சப்படத்தேவையில்லை. நல்ல வேலை தேடுவதற்கும், உயர்கல்விக்கும், உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும் உண்மையாக முயற்சி செய்யுங்கள். பெரிய அளவில் முன்னேற்றத்தை தந்துவிடுவார். அதேபோன்று மனிதர்களை மனிதர்களாக மதித்து நடத்துபவர்களை சனீஸ்வரர் ஒருபோதும் ஒன்றும் செய்யமாட்டார். அதுவே மற்ற மனிதர்களை கொடுமைப்படுத்துபவர்களை சனி பகவான் நிச்சயம் தண்டிப்பார்.
தனது தாயை நன்கு பார்த்துக்கொள்பவர்களை சனி பகவான் துன்புறுத்தமாட்டார்
மீன ராசியை போல சனி பகவானை நினைத்து பயத்தில் உள்ள சிம்மம், கன்னி, துலாம், தனுசு உள்ளிட்ட ராசியினருக்கு பரிகாரம் என்ன?
சிம்மம் என்பது கண்டக சனியாலும், கன்னி என்பது ஏழரை பார்வையாலும், தனுசு அர்த்தாஷ்டம சனியின் அச்சத்திலும் உள்ளனர். துலாம் ராசியினரோ, சனி என்று குறிப்பாக இல்லாமல், பல கிரக சேர்க்கையால் அச்சத்தில் உள்ளனர். ஆனால் சனி என்பவர், தாய் பக்தியில் அளவற்ற பற்றுடையவர். சனியின் தந்தை சூரியன். தந்தையால் தனது தாய் சில பல இன்னல்களுக்கு உள்ளாவதை கண்ட சனீஸ்வரர், அப்பாவை எதிர்த்து அம்மாவிற்கு ஆதரவு தருகிறார். எனவேதான் சனீஸ்வரரின் தாய் பக்தியை பார்த்து அவ்வளவு வல்லமையை பைரவர் அருளிவிட்டார். பெற்ற தாயை எவன் ஒருவன் மதிக்கிறானோ, அவனை உலகம் மதிக்கும் என்பதற்கு சனீஸ்வரர்தான் நேரடி உதாராணம். எனவே சனியின் அச்சத்தில் உள்ளவர்கள், தனது தாயை நன்கு மதித்து பார்த்துக்கொண்டாலே இன்னல்கள் தீர்ந்துவிடும். மேலும் வரும் சனீஸ்வரர் ஜெயந்தி அன்று தங்களால் முடிந்த நல்ல செயலை செய்தாலே போதும்.
நாம் இதுவரை சனீஸ்வரர் ஜெயந்தியை பற்றி பெரிதாக பேசியதில்லையே... அதைப்பற்றிக் கூறுங்கள்.
சனீஸ்வரர் ஜெயந்தி என்பது, சனி பகவான் அவதரித்த நாள். இந்தநாளில் ரகசிய வழிபாடு நடத்தி, குறிப்பிட்ட சிலரே ரகசியமாக பயன்பெற்று வந்தனர். ஆனால் ஆண்டுதோறும் சனீஸ்வரர் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சனீஸ்வரர் ஜெயந்தி, வரும் மே 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதுவும் செவ்வாய்க்கிழமையில் வருகிறது. செவ்வாய்க்கிழமையில் வரும் சனி ஜெயந்தி மிக மிக சக்திவாய்ந்தது. கடன், நோய் உள்ளிட்ட பெரிய பிரச்சினைகளில் உள்ளவர்கள், சனீஸ்வரரையும் முருகப்பெருமானையும் மனதில் நினைத்து வழிபட்டால் பெரும் பலன் கிடைக்கும். முடிந்தால் அருகில் உள்ள முருகர், கிருஷ்ணர் ஆலயங்களுக்கு அன்றைய தினம் சென்றுவரலாம். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், பஞ்சபூத கணபதியை மனதில் நினைத்து வழிபடலாம். இது திபெத்தில் தாந்திரீக வழியிலே வழிபட பயன்படுத்தப்பட்டது. இதை மனதில் கற்பனை செய்துகொண்டு, ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ் ஸ்வாஹா! ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ் ஸ்வாஹா! என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம். மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள், காதால் கேட்டால்கூட போதும்.
சனி ஜெயந்தியன்று வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம்
ஓம் ஓம் ஓம் ஆ.. ஷித்திகர்பா தி ஹான்லே ஸ்வாஹா. இது சீன மொழியில்.முருகனின் மந்திரம்தான். முருகனின் ஒரு அம்சத்திற்கு சீனத்தில் ஷித்திகர்பா என்று பெயர். உலகத்தை காக்கக்கூடிய ஒரு பொருளாக இருப்பவர் என்று அர்த்தம். எனவே சனி ஜெயந்தி அன்று இந்த மந்திரத்தை சொல்ல முடிந்தால் சொல்லலாம். அல்லது காதால் கேட்டாலே போதும். அன்று மட்டும் அல்லாமல் தினமுமே இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லலாம் அல்லது கேட்கலாம்.
மேலும் சனீஸ்வரர் ஜெயந்தி அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம், மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம், பொருளாதாரம் இடம் தந்தால் முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதுபோன்ற நன்மைகளை சனீஸ்வரர் ஜெயந்தி அன்று செய்தால் அவர்களுக்கு ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி, கண்டக சனி என எந்த நிலையிலே சனி பகவான் இருந்தாலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருந்தாலும், முடக்கு நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும், சனீஸ்வரர் நன்மையையே செய்வார்.