கெனிஷா கர்ப்பம்? ஃபோட்டோ வைரலானதால் சர்ச்சை!

Update:2025-06-17 00:00 IST
Click the Play button to listen to article

சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் பங்கேற்றார். திருமண வரவேற்பிற்கும் கெனிஷாவுடனேயே ரவி மோகன் வந்திருந்தார். அதனால் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவிற்கு வந்த அனைவரின் பார்வையும், ரவி மோகன் மற்றும் கெனிஷா மீதே இருந்தது. அதன்பிறகு ரசிமோகன், ஆர்த்தி, கெனிஷா என முக்கோணத்தில் ஏகப்பட்ட விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில், சமீபத்தில் கெனிஷா பகிர்ந்த புகைப்படம் ஒன்றில் அவர் கர்ப்பமாக இருப்பதுபோலத் தெரிவதாக சமூக வலைதளங்களில் சிலர் கமெண்ட் செய்தனர். இது, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதுபோல் இருந்தது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இணைய சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கெனிஷா, தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை பற்றிய பல்வேறு கேள்விகளுக்கும் வெளிப்படையாக பேசியுள்ளார்.


பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ்

யார் இந்த கெனிஷா?

தமிழ் மற்றும் ஆப்பிரிக்க தம்பதியினருக்கு மகளான கெனிஷா ஃபிரான்சிஸ், பெங்களூருவில் பிறந்துள்ளார். பெற்றோருக்கு ஒரே பெண்ணான அவர், வளர்ந்தது எல்லாம் கென்யாவில். லண்டனில் இசை பயின்ற அவர், மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பிவிட்டார். தன்னுடைய அம்மா பாடகி என்பதால், தனக்கும் இசையில் ஆர்வம் வந்ததாகவும், 2013-ஆம் ஆண்டு அம்மா இறந்துவிட, பின்னர் அப்பாவும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது பெற்றோருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தே தான் பிறந்ததால், மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதாகவும், ஆனால் பெற்றோர் மறைவிற்கு பின்னர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்ததாகவும் , காப்பி ஷாப் ஒன்றில் ரூ.500 சம்பளத்திற்கு வேலை பார்த்ததாகவும், கிடைத்த அனைத்து பணிகளையும் செய்ததாகவும் கெனிஷா கூறியுள்ளார். மேலும் இன்டர்வியூ ஒன்றில், தன்னை ஒரு Therapist என்றும் கெனிஷா ஃபிரான்சிஸ் தெரிவித்திருந்தார். இசையில் தீவிர ஆர்வம் இருந்ததால் அதனை முறையாக பயின்று ஏராளமான இசைக் கச்சேரிகளை நடத்தி பிரபலமான நபராக மாறியிருக்கிறார் கெனிஷா.

ரவி - கெனிஷா உறவு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோன் (ஜெயம் ரவி), எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்துவந்தார். ஆனால் எப்போது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தாரோ, அன்றுமுதல் சர்ச்சைகளின் நாயகனாகவே மாறிவிட்டார். அவ்வப்போது அவர்தான் தலைப்புச் செய்தி என்றுகூட சொல்லலாம்.  


கெனிஷா - ரவி மோகன்

சினிமா ஷூட்டிங்கிற்காக ரவி மோகன் கோவா சென்றிருந்தபோது, கெனிஷா – ரவி இடையே நட்பு ஏற்பட்டதாகவும், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி திருமண உறவு முறிவுக்கு கெனிஷாதான் காரணம் என்றும் பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த சூழலில்தான், சினிமா தயாரிப்பாளர், ஐசரி கணேஷின் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில், ரவியும் கெனிஷாவும் ஒன்றாக கலந்துகொண்டனர். அதுவும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து, கைக்கோர்த்து, திருமணத்திற்கு வந்த நிகழ்வு இணையம் முழுவதும் தீயாய் பரவியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவை பற்றிக்கூட பேசாதவர்களும், ரவி கெனிஷாவை பற்றிதான் பேசினர். இதனால் எங்கு திரும்பினாலும், ரவி மோகன் மற்றும் கெனிஷா மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இருவரும் லிவ்வின் ரிலேஷனில் இருப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளப்  போகின்றனர் என்றும் கூறப்பட்டது. இவ்வாறு பிரச்சனை சென்று கொண்டிருக்க, தன்னை ரவியின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம் என்றும், சட்டப்பூர்வமாக தாங்கள் இன்னும் பிரியவில்லை என்றும் தெரிவித்தார். அப்போது வெளிப்படையாக அறிக்கைவிட்ட ரவி மோகன், ஆர்த்தி தன்னுடைய முன்னாள் மனைவி என்றும், இனி தன்னுடைய வாழ்க்கை துணை கெனிஷா என்றும் கூறினார்.  

மாலையும் கழுத்துமாக!

ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தபிறகு தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் ரவி மோகன். தனியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.


குன்றக்குடி கோயிலில் கெனிஷா - ரவி மோகன்

இந்த நிலையில், ரவி மோகனும் கெனிஷாவும் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. அவர்கள் குன்றக்குடி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "என்ன திடீர்னு இரண்டு பேரும் மாலையும், கழுத்துமாக இருக்காங்க. என்னாச்சுனு தெரியலையே" என்று கமெண்ட்ஸ் செய்தனர். முன்னதாக ஒரு பேட்டியில், "நான் எனது சோல்மெட்டை கண்டுவிட்டேன். அந்த சோல்மெட் என்னை அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் உணர வைக்கிறார்" என்று கெனிஷா தெரிவித்திருந்ததால், பலரும் பலவிதமாக கருத்துகளை இணையத்தில் தெறிக்கவிட்டனர்.

கெனிஷா கர்ப்பம்?

சமூக வலைதளங்களில் கெனிஷா ஆக்டிவாக உள்ளார். இதன் காரணமாகவே ரவி, ஆர்த்தி, கெனிஷா விவகாரத்தில் இணையவாசிகள் பலரும் கெனிஷாவை பல்வேறுவிதமாக விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அந்த கமெண்டுகளை பார்த்து மனம் உடைந்துபோன கெனிஷா, ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்திற்கு தான் காரணம் அல்ல என்று கூறினார். மேலும் தன்னை கேவலமாக விமர்சிப்பதுடன், தன் தாய் மற்றும் வளர்ப்பு பற்றியும் விமர்சித்தவர்களை கடுமையாக சாடிய கெனிஷா, அவரவர் பேசும் பேச்சுகள் அனைத்திற்கும் ஒருநாள் நிச்சயம் தண்டனை கிடைக்கும், நாம் என்ன செய்கிறோமோ, கண்டிப்பாக அது நமக்கே திரும்ப வரும் என்றும் தெரிவித்தார். தன்னைப்பற்றி அவதூறு பேசும் அனைவருக்கும் உண்மை ஒருநாள் தெரியவரும் என்றும், அதுவரை தான் வேடிக்கை மட்டும் பார்க்கப்போவதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் கெனிஷா அண்மையில் புகைப்படம் ஒன்றை தனது சோஷில் மீடியா பேஜில் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது கெனிஷா கர்ப்பமாக இருப்பதுபோலத் தெரிவதாக பலர் கமெண்ட் செய்தனர். மேலும் அப்படம் வைரலானதையடுத்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 


கைகளை வயிற்றின்மீது மடக்கி வைத்திருப்பதால் கர்ப்பமாக இருப்பதுபோல் தெரிகிறது - கெனிஷா

கெனிஷா விளக்கம்

தான் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ள கெனிஷா, முன்னர் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு என்ன பதில் சொன்னாரோ அதேபோன்றுதான் இப்போதும் கூறியுள்ளார். நான் ஒன்றும் கர்ப்பம் இல்லை. நான் சிக்ஸ் பேக்கும் வைத்திருக்கவில்லை. உங்களுக்கு வாய் இருக்கிறது என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் யார் என்ன பேசினாலும், அது அவர்களுக்கே திரும்ப வரும். கர்மா சும்மா விடாது. எது உண்மை எது பொய் என்று எல்லோருக்கும் ஒரு நாள் தெரியவரும். அதுவரையில் எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள். நான் எனது கைகளை மடக்கி வைத்திருந்ததால் அந்தப் புகைப்படத்தில் அப்படித் தெரிந்தது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். 

"என்னைப் பற்றி பேசும் உங்களில் பலருக்கு அப்பா அம்மா கூடவே இருப்பார்கள். அவர்கள் உங்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்ற ஒரு எச்சரிக்கை உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்கள் உங்களை கண்டிப்ப்பார்கள். அந்த அச்சத்தில் நீங்கள் தவறு செய்ய அஞ்சுவீர்கள். இதே போன்றுதான் எனக்கும். ஒரே வித்தியாசம், என் பெற்றோர் இறந்துவிட்டார்கள். ஆனால் மேலே இருந்து என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் இருந்து நான் தப்ப முடியாது. அதனால் நான் அவர்களுக்கு பயந்துதான் நடப்பேன். எனக்கு என்னுடைய பெற்றோர் மட்டும்தான் துணையாய் இருக்கிறார்கள்", என்றும் கெனிஷா உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்