மாத்திரை, அறுவை சிகிச்சை, பக்கவிளைவின்றி நோய்களை குணப்படுத்தலாம்! உண்மைதான்!
உலகளவில் பல்வேறு மருத்துவ முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது அலோபதி. இந்த மருத்துவத்தையே இன்று பெரும்பாலான மக்கள் நாடுகின்றனர். இதற்கடுத்து, ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி என்று பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்கள் பின்பற்றுகின்றனர். இவற்றுக்கெல்லாம் மாற்றாக குத்தூசி என்றைழைக்கப்படுகின்ற அக்குபஞ்சர், அக்குபிரஷர் போன்றவை இருக்கின்றன. இதில் அக்குபஞ்சர் சிகிச்சை முறை குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் அக்குபஞ்சர் நிபுணர் லூதர் சேத்.
அக்குபஞ்சர் சிகிச்சைமுறையில் எல்லா நோய்களுக்கும் குறிப்பாக ஆஸ்துமா நோய்க்கு தீர்வு காணமுடியுமா?
அக்குபஞ்சர் மருத்துவத்தின் மூலம் அனைத்து நோய்களுக்கும் நாம் தீர்வு காணலாம். முறையாக அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்றுக் கொள்ளாத ஒரு சில அக்குபஞ்சர் மருத்துவர்களால் நோய்களுக்கு தீர்வு காண முடியவில்லை என்றே நாம் சொல்லவேண்டும். இந்த மருத்துவ முறையை முழுமையாக கற்றுக்கொடுக்கக் கூடிய அமைப்பானது இந்தியாவில் இன்னும் வரவில்லை. இந்த கற்றுக்கொடுக்கும் அமைப்பை அதிகரிக்கச் செய்தால் முழுமையாக அக்குபஞ்சர் மருத்துவம் என்பது எல்லோருக்கும் கிடைக்கும். அதே நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் நிறைய அக்குபஞ்சர் மருத்துவர்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில் 99 சதவீத நோய்களை இந்த மருத்துவமுறையில் மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை மற்றும் பக்கவிளைவுகள் இன்றி குணமாக்க முடியும்.
மூச்சுத்திணறலுக்கு பயன்படுத்தப்படும் இன்ஹேலர்களால் பக்கவிளைவுகள் உண்டு - லூதர் சேத்
ஆஸ்துமா நோயை இந்த மருத்துவமுறையில் குணமாக்க எவ்வளவு காலம் பிடிக்கும்?
ஆஸ்துமா வியாதியை நாங்கள் வெறும் இரண்டு மாதங்களிலேயே முழுமையாக குணப்படுத்தி விடுகின்றோம். ஆஸ்துமா என்பது, நாம் அன்றாடம் குடிக்கும் டீ காபி பால் போன்ற உணவு முறைகளால் ஏற்படுகின்றது என்றே நாம் சொல்லலாம். காரணம் இவை நமது வாழ்வில் தினமும் தவிர்க்கமுடியாத உணவுகளாகிவிட்டன. தாய்ப்பாலை தவிர மற்ற பிராணிகளின் பாலை நமது உடல் ஏற்றுக்கொள்ளாது. இதன் காரணமாக ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி சுவாச பிரச்சனையாக மாறி ஒரு சிலருக்கு இது ஆஸ்துமா நோயாக மாறுகின்றது. அக்குபஞ்சர் மருத்துவ முறையில் ஆஸ்துமா நோய்க்கு நிரந்தர தீர்வு காணப்படுகின்றது.
மூச்சுத்திணறல் எதனால் வருகின்றது?
மூச்சுத்திணறல் என்பது சுவாச கோளாறுகளில் ஒன்றாகும். உள்ளிழுக்கும் மூச்சை வெளியேவிடும் போது ஏற்படும் சிரமமே மூச்சுத்திணறலாகும். இது தொடரும் போதுதான் அது மூச்சு திணறலாக உருவெடுத்து பின்னர் சைனஸ் தொல்லையாக மாறி, சரி வர நாம் கவனிக்காத பட்சத்தில் அது ஆஸ்துமாவாக மாறுகின்றது. இதனை நாம் முறையாக கவனித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். இதற்கு அக்குபஞ்சர் மருத்துவ முறையில் முறையான தீர்வு உண்டு .
பால் மற்றும் பால்பொருட்களை உட்கொள்வதால் உடலில் சளி சேருகிறது
மருந்து மாத்திரைகள் மூலம் ஆஸ்துமா குணமாவதை உணர்வதை போன்று, அக்குபஞ்சர் மருத்துவத்தின்போது அதனை நம்மால் உணர இயலுமா?
ஆஸ்துமாவிற்கு மற்ற மருத்துவமுறைகளில் தரப்படும் மருந்து மாத்திரைகள் எல்லாமே ரசாயனம் கலந்த ஆன்டிஹிஸ்டமைன் வேதிபொருட்களால் ஆனதாகும். இது தற்காலிக தீர்வை மட்டுமே ஆஸ்துமா நோயாளிகளுக்கு தருகின்றது. ஆனால் அக்குபஞ்சர் மருத்துவ முறையில் இயற்கையாக உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஊசிகளின் மூலம் நாங்கள் தூண்டுவதால் உடலில் ஆன்ட்டிஹிஸ்டமைன் சுரந்து இயற்கையாகவே நோயாளிகளுக்கு சில நிமிடங்களிலேயே நிரந்தமாக ஆஸ்துமா குணமாகின்றது.
அக்குபஞ்சர் மருத்துவத்தில் மூச்சுக்குழல் அழற்சி மற்றும் நுரையீரல் அழற்சி ஒவ்வாமையை குணப்படுத்த முடியுமா?
பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் ஈரப்பதத்தால் இது ஏற்படுகின்றது. இந்த ஒவ்வாமையைத் தான் ஆங்கிலத்தில் அலர்ஜி என்றழைக்கின்றனர். இந்த உணவுகளின் மூலம் நமது உடலில் ஈரப்பதம் உண்டாவதால் பஞ்ச பூத சக்தியான இந்த ஈரப்பதம் நமது உடலில் நுரையீரலில் தங்கும்போது அது மூச்சுவிடுவதில் சிரமத்தை தருகின்றது. நமது உடலிலுள்ள உள்ளுறுப்புகளின் ஈரப்பதம் என்பது அளவாக கட்டுக்குள் இருக்கும் போது மட்டுமே நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது தவறும் பட்சத்தில் அது நோயாக மாறுகின்றது. நமது உடல் ஏற்றுக்கொள்ளாத உணவுப் பொருட்களை நாம் தவிர்த்து விட்டாலே இதனை நாம் தவிர்க்கலாம்.
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் குணமாக்கலாம்!
டெம்ப் என்றால் என்ன?
டெம்ப் என்பது நமது உடலிலுள்ள ஈரப்பதம் ஆகும். இயற்கையாகவே இறைவன் நமக்கு பஞ்ச பூத சக்திகளை நமது உடலில் படைத்துள்ளான். அதில் ஒன்றுதான் நமது உடலிலுள்ள நீர்சக்தியாகிய ஈரப்பதம். இது சமநிலையில் இருக்கவேண்டும். அப்படி சமநிலை தவறும்போது அது உடலுக்கு நோயாக மாறுகின்றது.
நாள்பட்ட ஆஸ்துமாவை குணப்படுத்தமுடியுமா?
நாள்பட்ட ஆஸ்துமா என்பது உடலில் ஹிஸ்டமைன் அதிகம் சுரப்பதால் ஏற்படுகின்ற ஒன்றாகும். அதற்கு நாம் ஆன்டிஹிஸ்டமைனை இயற்கையாக தூண்டுவதன் மூலம் ஆஸ்துமா குணமாகும். இது பெரியவர்களுக்கு சற்று காலதாமதமாகவும் சிறுவர் சிறுமியருக்கு விரைவாகவும் செயலாற்றும்.
மூக்கடைப்பிற்காக பயன்படுத்தப்படும் இன்ஹேலர்கள் மூக்கு மற்றும் சுவாசக் குழாயை பாதிக்குமா?
இதுவும் கூட ஒரு வேதிப்பொருள் நிறைந்த ஆன்டிஹிஸ்டமைன் ஆகும். இது சிறுவர் சிறுமியருக்கு மூக்கடைப்பை உடனடியாக குணமாக்குகின்றது. ஆனால் இதற்குபின்னால் உள்ள பக்கவிளைவுகளை அவர்கள் அறிவதில்லை.
உடலில் சளி சேராமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இதற்கு நான் கூறும் பதில் நீங்கள் பால் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால்தான் சளி உடலில் சேர்கின்றது. பாலில் இருக்கும் புரோட்டீனைவிட தாவரங்கள் மற்றும் உணவு தானியங்களில் அதிகம் புரோட்டின்கள் உள்ளன. பாலை செரிக்கக்கூடிய என்ஸைம்கள் நமது உடலில் இல்லை. நமது உடலில் உள்ள ஈரப்பதத்தை அதிகமாக்குவதில் பால் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் சளி அதிக அளவில் சேருகின்றது. இது பல மூச்சு பிரச்சனைகளுக்கும் காரணியாக அமைகின்றது. எனவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்த்தல் நலம் தரும்.
அக்குபஞ்சர் சிகிச்சையில் பக்கவிளைவுகள் இல்லை - அக்குபஞ்சர் நிபுணர் லூதர் சேத்
அக்குபஞ்சர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் உண்டா?
அக்குபஞ்சர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் என்பது கிடையாது. அப்படி நீங்கள் ஒருவேளை தவறாக அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் கூட விளைவுகள் மற்றும் எதிர்விளைவுகள் என்பது சற்றும் இல்லையென்றே கூறலாம்.
செயின் ஸ்மோக்கர்ஸ் என்றழைக்கப்படும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களை அக்குபஞ்சர் மருத்துவத்தால் மீட்டெடுக்க முடியுமா?
நிச்சயமாக முடியும். ஆனால் புகைப்பிடிப்போருக்கு அந்த பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணம் முதலில் இருக்கவேண்டும். இதுபோன்றோர் தொடர்ந்து ஒரு 5 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டாலே போதுமானது. புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் நுரையீரலை சுத்திகரிப்புச் சிகிச்சையின் மூலம் சுத்தம் செய்தால், அந்த பழக்கத்திலிருந்து அவர்களாகவே விடுபடமுடியும் .
அக்குபஞ்சர் மருத்துவராக நீங்கள் சாதித்த சாதனையாக கருதுவது என்ன?
சுவாச பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமாவினால் அவதிப்பட்டுவந்த பல நோயாளிகளை நாங்கள் எங்களது அக்குபஞ்சர் மருத்துவ முறையின் மூலம் நன்கு குணமாக்கியுள்ளோம். குறிப்பாக 15 வருடங்களாக மூச்சுவிட மிகுந்த சிரமப்பட்டு, தனக்கு மரணம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த 35 வயது பெண்ணொருவர் எங்களிடம் அக்குபஞ்சர் மருத்துவ முறையை நாடி வந்தார். நாங்கள் அந்த பெண்ணிற்கு ஒரு நிமிடத்தில் சுவாச பிரச்சனையை குணமாக்கி அனுப்பியதை எங்கள் அக்குபஞ்சர் மருத்துவத்தின் சாதனையாக பார்க்கின்றேன். சுவாச பிரச்சனைகளை தீர்ப்பதற்கென்றே அக்குபஞ்சர் மருத்துவத்தில் சிலபுள்ளிகள் உள்ளன. அவற்றை கொண்டு இந்த பிரச்சனைகளை சில நிமிடங்களில் நாம் தீர்த்துவிடலாம்.
மற்ற மருத்துவ முறைகளுக்கும் அக்குபஞ்சர் மருத்துவமுறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அக்குப்பஞ்சர் மருத்துவதத்தின் மகிமையே "மருந்தில்லா மருத்துவமுறையாகும்". அதாவது மற்ற மருத்துவ முறைகளில் உள்ள மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள், என எதுவும் அக்குபஞ்சரில் இல்லை. வெறும் குத்தூசிகளின் மூலம் உடலில் உள்ள புள்ளிகளை தூண்டுவதன் மூலம் நோயாளிகள் நோயிலிருந்து குணமாகின்றனர். ஆனால் மற்ற மருத்துவ முறைகளில் மருத்துவர்களால் எழுதி தரப்படும் மருந்துகள் மாறிப்போவதற்கோ அல்லது தவறுதலாக தரப்படவோ வாய்ப்புகள் அதிகம். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக என்னுடன் பிறந்த எனது அண்ணன் சிறுவயதில் பென்சிலின் ஊசி தவறாக செலுத்தப்பட்டதன் காரணமாக மரணம் அடைந்துவிட்டார். ஆனால் அக்குபஞ்சர் மருத்துவ முறையில் யாரும் இறப்பதில்லை. ஏனென்னறால் இது முழுவதும் பக்கவிளைவுகள் இல்லாதது.